Published April 2, 2023 | Version v1
Journal article Open

ஔவையாரின் ஆளுமையும் மனிதநேய சிந்தனைகளும்

Authors/Creators

Description

உலக அளவில் அறிவியல் வளர்ச்சி வளர்ந்த அளவிற்கு மனிதநேயச் சிந்தனைகள் வளரவில்ல. இதனால் நாடுகளில் பல  பொருளாதார நெருக்கடிகளும், போர்களும் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்பலியாவது தொடர்கதையாகவே உள்ளது. அபரீமிதமான அறிவியல் வளர்ச்சி, இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை மனித சமூகத்தின் வாழ்வியலை  மாற்றியுள்ளன.  மேலும் மக்கள் மத்தியில் நிலவும் மனிதநேயம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. இச்சூழலில் உலகமக்களிடைய மனிதநேயசிந்தனை வளர்த்தெடுக்கபடவேண்டும். அதற்கு .ஔவையாரின் மனித நேய சிந்தனைகள் மக்களிடம் ஆழப்பதிந்து வேர்விடவேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. புறநானூற்றில் இடம்பெறும் ஔவையாரின் 33 பாடல்கள் வழி அவரின்  ஆழ்ந்த அனுபவம், கூர்ந்த அறிவு, தெளிந்த சிந்தனை ஆகியவை மிகச்சிறந்த அரசியல் ஆளுமையாக வெளிப்பட்யிருப்பதைக்  காண முடிகிறது. ஔவையார் தனது பாடல்களில் வீரத்தைப் பாராட்டியிருப்பினும் வீரத்தைவிட மனிதநேயம்,ஒற்றுமை, ஆற்றல்மிக்க செயல்பாடுகள் மனிதசமூகத்திற்கு தேவை என்பதை வலியுறுத்தியிப்பதைக்  காண முடிகிறது.

Files

New doc Feb 19, 2023 8.49 PM.pdf

Files (2.8 MB)

Name Size Download all
md5:55b49b146ddd2add4a3407c6a404618c
2.8 MB Preview Download