Adorning Artistic Values of Sangh Literature
Authors/Creators
- 1. Assistant Professor of Tamil, Agurchand Manmull Jain College, (Shift II) Meenambakkam, Chennai 600 061.
Description
ஒப்பனை என்ற சொல்லிற்கு அழகூட்டுதல் என்று பொருள். ஒப்பனையாவது உச்சம் தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் அழகு மிளிரச் செய்வதாகும். பெண்கள் என்றாலே அழகுதான். சங்க காலத்திலிருந்து இன்றுவரை பெண்கள் தங்களை மேலும் அழகுடையவர்களாகக் காட்டிக் கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். தலை,முகம், கை, கால், விரல், இடை, கழுத்து என்று ஒவ்வொன்றையும் மலர்கள், பொன்,முத்து, பவளம் போன்ற விலையுயர்ந்த அணிகலன்களாலும், பருத்தியாடை, பட்டாடை என்று பலவகையாக உடைகளாலும், தம்மை அலங்கரித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். கன்னம், நகம், கால் ஆகியவற்றிற்கு செம்பஞ்சுக்குழம்பு பூசி சிவப்பாகவும், அழகாகவும் தம்மை ஆக்கிக் கொண்டனர். ஒப்பனை அறிவு அவர்களுக்கு அன்றே இருந்தது என்பதை சங்க இலக்கியங்களின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். அத்தகைய சிரசுக்குக் கூந்தலே பிரதானம். அத்தகைய கூந்தலை முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்று ஐவகையாக முடிந்து தங்களை அழகுபடுத்திக் கொண்டனர்.தம்மைத் தாமே அலங்கரித்துக் கொண்டும், பிற மகளிரை அழகுபடுத்திப் பார்த்தும் மகிழ்வுடன் வாழ்ந்தனர். தம் அழகைப் பார்த்து தலைவன் ரசிக்க வேண்டும் என்று விரும்பினர். அதனால் தலைவன் அருகில் இருக்கும்போது தம்மைப் பலவகையாக அலங்கரித்துக் கொண்டனர். தலைவன் அருகில் இல்லாத போது, தம்மை அவர்கள் அலங்கரித்துக் கொள்வதில்லை என்பதையும் சங்க இலக்கியங்களின் வழி நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
Files
7.pdf
Files
(649.9 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:08aa9406e0f7322f55c4f8681e88e3e2
|
649.9 kB | Preview Download |
Additional details
Dates
- Available
-
2026-01-01