Published January 25, 2026 | Version v1
Journal article Open

மாணிக்கவாசகரின் பக்தியும் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் வரலாறும்

Authors/Creators

Description

மாணிக்கவாசகர் சைவ சமய வரலாற்றில் தனித்துவமான பக்திக் கவிஞராக விளங்குகிறார். அரசியற்
பொறுப்பில் இருந்த ஒரு மனிதன், சிவபெருமானின் அருளால் தன்னை முழுமையாக அர்ப்பணித்த
பக்தனாக மாறிய அதிசய மாற்றமே அவரது வாழ்க்கையின் மையம். இந்த மாற்றம் நிகழ்ந்த முக்கியத் தலம் திருப்பெருந்துறை ஆகும்; இன்றைய ஆவுடையார் கோயில் என அழைக்கப்படும் இத்தலம், மாணிக்கவாசகர் வாழ்விலும் திருவாசக உருவாக்கத்திலும் அடிப்படைப் பங்கு வகிக்கிறது. மதுரை பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர், குதிரை வாங்கும் பொருட்டு அனுப்பப்பட்டபோது, திருப்பெருந்துறையில் சிவபெருமானை குருவாக சந்தித்தார். அங்கே நிகழ்ந்த ஆன்மீக அனுபவமே அவரது அகந்தையை அழித்து, அரச வாழ்வை விட்டு இறைவன் திருவடிகளில் சரணடையச் செ#தது. இரும்பு  தரு மனம் உருக்கி என அவர் திருவாசகத்தில் சொல்வது, இந்த உள்மாற்றத்தின் நேரடி வெளிப்பாடாகும். திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் வரலாறு,  சிவபெருமான் மறையோனாக (வேதியராக)  வந்து மாணிக்கவாசகரை ஆட்கொண்ட நிகழ்வை மையமாகக் கொண்டது. குதிரை வாங்க வந்த பொருள்  முழுவதும் கோயில் கட்டுதலுக்காக செலவழிக்கப்பட்டதும், பின்னர் சிவபெருமான் குதிரைகளை நரிகளாக  மாற்றிய திருவிளையாடலும், சைவ மரபில் பரவலாக அறியப்பட்டவை. இந்த வரலாற்றுச் செ#திகள் மாணிக்கவாசகர் விலாசம், தலபுராணங்கள், மற்றும் பிற்காலக் கவிஞர்களின் பாடல்களில் பதிவு செ#யப்பட்டுள்ளன. ஆவுடையார் கோயில், ஆகம மரபுக்கு மாறுபட்ட அமைப்புடன், லிங்க உருவமின்றி ஆவுடை (யோனி) மட்டுமே பிரதானமாக விளங்கும் தனித்துவம் கொண்டது. இது, உருவ வழிபாட்டைத் தாண்டிய அருள்-அனுபவ சைவ தத்துவத்தை குறிக்கும்ச்மாகக் கருதப்படுகிறது. மாணிக்கவாசகரின் பக்தியும் இதே தத்துவத்தையே வலியுறுத்துகிறது&சடங்கு அல்ல, அக உருகும் அன்பே மெ# வழிபாடு. திருவாசகத்தில் காணப்படும் குருவருள், அகந்தை ஒழிவு, பிறப்பு-இறப்பு விடுதலை போன்ற கருத்துகள், திருப்பெருந்துறை  அனுபவத்தின் இலக்கிய வடிவங்களாக அமைந்துள்ளன. இதனால், திருப்பெருந்துறை வெறும் வரலாற்றுத் தலம் அல்ல் திருவாசகத்தின் ஆன்மீக ஆதாரம் எனக் கருதப்படுகிறது. மாணிக்கவாசகரின்  பக்தியும் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் வரலாறும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளன. அவரது வாழ்க்கை அனுபவம், கோயில் வரலாறாகவும்; கோயில் வரலாறு, திருவாசகத்தின்  ஆன்மீக உள்ளடக்கமாகவும் மாறியுள்ளமை, சைவ பக்தி மரபின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது.

Files

388-398.pdf

Files (648.9 kB)

Name Size Download all
md5:d6c6cf8add340fcb8dfd00a89f1a6a15
648.9 kB Preview Download